புதன், 8 ஏப்ரல், 2015

சொந்தக் காலை நம்பி
சோர்ந்தவர்கள் நடுவில்
கட்டைக் காலை நம்பியே
காலை கண் திறக்கிறோம்!
நிஜக் காலை நம்பி
நொடித்துப் போனவர்கள் மத்தியில்
பொய்க்கால்களை நம்பி  போராடுகிறோம்!
உண்மைக் குதிரையில் பயணிப்பவர்களுக்கிடையில்
பொய்க்குதிரையில் பயணம் செய்கிறோம்!
ஆனால்
மெய் எல்லாம் பொய்யாய் போனவர்களிடிலும்
பொய்யை மெய்யாக்கி மேன்மை அடையவே
பொய்யான வேடமிட்டு
நிஜமாக நடனமிட்டு
மெய்யான வாழ்க்கையினை
மெய்யாகவே வாழ்ந்திட பாடுபடுகிறோம்!